குவைத் காயிதே மில்லத் பேரவை (நடுநிலை இயக்கம்) அமைப்புக் குழுக் கூட்டம்
25/09/2009-வெள்ளி மாலை-07.30
குவைத் காயிதே மில்லத் பேரவையின் அமைப்புக்குழுக் கூட்டம் குவைத் இ.யூ.மு. லீக் அமைப்பாளர், குவைத் கா.மி.பேரவை அமைப்பாளர் டாக்டர். கே.எஸ்.அன்வர்பாட்சா தலைமையில் சால்மியா பகுதியிலிருக்கும் ஏ.கே.எஸ் இல்லத்தில் வெள்ளி மாலை 07.00 மணியளவில் நடைபெற்றது. அது சமயம் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்,
1. காயிதே மில்லத் பேரவையின் சர்வதேச அமைப்பாளரும், அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவரும், வேலூர் நாடளுமன்ற தொகுதியில் முஸ்லீம் லீக் சார்பில் அமோக வெற்றிபெற்ற முத்துப்பேட்டை ஹாஜி.எம்.அப்துர்ரஹ்மான் எம்.பி. அவர்களுக்கு பேரவையின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவரை குவைத்திற்கு அழைத்துவந்து சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்காக தேதி குறித்து- பேரவை சார்பாக அழைப்பு தரவும் முடிவு செய்யப்பட்டது.
2. குவைத் காயிதே மில்லத் பேரவைக்கும், முஸ்லீம் லீக் பேரியக்கத்திற்கும் சமுதாய ஆர்வங்கொண்டோர்களை உறுப்பினர்களாக சேர்த்து பேரவைக்கு நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட அமைப்புக்குழு உறுப்பினர்கள்.
1 .மவுலானா மவ்லவீ.மகபூப் பாஷா (சேலம்)
2. மவ்லவீ அப்சலுல் உலமா அ.ப.கலீல் அஹ்மது பாகவீ. எம்.ஏ (பரங்கிப்பேட்டை)
3.ஏ.கே.எஸ்.நாசர். பி.ஏ. (சென்னை)
4.ஹாஜி.எச்.அப்துல் நாசர் (புத்தாநத்தம்)
5.ஏ.ஆர்.நிசாம் முகம்மது எம்.ஏ. (விருத்தாசலம்)
6.ஹாஜி.ஏ.அப்துல் முத்தலிப் (வடக்கு மாங்குடி)
7.ஆர்.ஷர்புதீன் (நோச்சியம்)
கூட்ட இறுதியில் புத்தாநத்தம் நாசர் நன்றியுரையுடன் இனிதே நிறைவேறியது.
தலைமையின் ஒப்புதல் கடிதம்
வஸ்ஸலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக